Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace

காமத்துப்பால் · LoveKural 1101 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1101

Tamil original

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

Read the sounds · Transliteration

Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum
Ondhoti Kanne Ula

Understand the idea · English meaning

The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).

Connect it to life today · Modern meaning

The person you love can make every sense feel alive: sight, sound, taste, scent, and touch. After a difficult day, even a partner's welcoming smile, voice, and embrace can make the whole world feel warm again.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

Kalaignar

கலைஞர் : வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன