குற்றங்கடிதல்
The Correction of Faults
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
Read the sounds · Transliteration
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?
Understand the idea · English meaning
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
Connect it to life today · Modern meaning
Before judging other people's faults, a leader should remove the same faults from their own conduct. For example, a team captain should admit being late before demanding better punctuality from everyone else.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
Kalaignar
கலைஞர் : முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?