Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பண்புடைமை

Courtesy

பொருட்பால் · WealthKural 999 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 999

Tamil original

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

Read the sounds · Transliteration

Nakalvallar Allaarkku Maayiru Gnaalam
Pakalumpaar Pattandru Irul

Understand the idea · English meaning

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

Connect it to life today · Modern meaning

People who cannot share joy or connect with others may feel that the whole world is dark, even in good times. For example, an isolated student may begin to feel better after joining a welcoming club and making friends.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

Kalaignar

கலைஞர் : நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்