Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கொடுங்கோன்மை

The Cruel Sceptre

பொருட்பால் · WealthKural 557 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 557

Tamil original

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.

Read the sounds · Transliteration

Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku

Understand the idea · English meaning

As is the world without rain, so live a people whose king is without kindness.

Connect it to life today · Modern meaning

Just as land cannot live without rain, people cannot thrive under a ruler without compassion. A principal who listens and helps students in difficulty can make a whole school feel secure.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

Kalaignar

கலைஞர் : மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்