Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மன்னரைச் சேர்ந்தொழுகல்

Conduct in the Presence of the King

பொருட்பால் · WealthKural 693 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 693

Tamil original

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

Read the sounds · Transliteration

Potrin Ariyavai Potral Katuththapin
Thetrudhal Yaarkkum Aridhu

Understand the idea · English meaning

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king’s suspicion is once roused, no one can remove it.

Connect it to life today · Modern meaning

Protect yourself by avoiding serious mistakes; once a ruler suspects you, clearing the suspicion is very hard. A manager who hides one major error may lose trust even after explaining it later.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

Kalaignar

கலைஞர் : தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல