Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு கிளத்தல்

Soliloquy

காமத்துப்பால் · LoveKural 1243 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1243

Tamil original

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல்.

Read the sounds · Transliteration

Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il

Understand the idea · English meaning

O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow

Connect it to life today · Modern meaning

She asks why her heart stays and suffers over the person who caused the pain, since he has no compassion for her. Replaying conversations with someone who will not respond only deepens the wound.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

Kalaignar

கலைஞர் : பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?