Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 37 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 37

Tamil original

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

Read the sounds · Transliteration

Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai

Understand the idea · English meaning

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

Connect it to life today · Modern meaning

The benefits of virtue can be seen in the way people live, not just explained in books. A person who acts with integrity usually carries responsibilities with greater peace, while someone who acts selfishly often feels burdened by fear and conflict. For example, two managers may face the same problem: the honest one can ask for help openly, while the dishonest one must keep hiding past actions. Conduct creates its own rewards and burdens.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

Kalaignar

கலைஞர் : அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்